tamilnadu

img

நலவாரிய பணப்பலன்களை முறையாக வழங்கிடுக

சேலம் ஜூன் 23- நலவாரியங்களில் வழங்கப் படும் பணப் பலன்களை தொழிலா ளர்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் சிஐடியு ஜில்லா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் ஆண்டு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. சேலம் சிஐடியு ஜில்லா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் ஆண்டு பேரவை வி.பி.சிந்தன் நினைவகத்தில் ஞாயிறன்று சங் கத்தின் தலைவர் சி.கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது. உதவித் தலைவர்    பி.ஆறுமுகம் சங்க கொடியை ஏற்றினார். துணை  செயலாளர் பி.ராஜா வரவேற்புரை யற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் பி.பன்னீர்செல்வம் பேர வையை துவக்கி வைத்து உரை யாற்றினார். பொதுச்செயலாளர் ஏ.கோவிந்தன், பொருளாளர் செல்வக்குமார் ஆகியோர் அறிக் கையை முன் வைத்து பேசினர். முன்னதாக, இப்பேரவையில் நலவாரியங்களில் வழங்கப்படும் பணப் பலன்களை தொழிலாளர் களுக்கு முறையாக வழங்கிட வேண்டும். ஆத்தூர் பகுதியில் உள்ள கூட்டுறவு உற்பத்தி நிறு வனத்தில், நியாயவிலை கடை களுக்கு பொருட்களை ஏற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்க ளுக்கு தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவுபடி பணி வழங்க வேண்டும். சேலம் சேகோ நிறுவ னத்திற்கு சொந்தமான இடத்தில் குடோனை அமைத்து ஒரே இடத்தில் ஜவ்வரிசி வியாபாரத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். அரசு சார்ந்த நிறுவனங்களில் பணி யாற்றும் சுமை தூக்கும் தொழி லாளர்களுக்கு இபிஎஃப் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதனையடுத்து புதிய தலை வராக டி.ஆறுமுகம், பொதுச்செய லாளராக ஏ.கோவிந்தன், பொரு ளாளராக ஆர்.செல்வகுமார் உள் ளிட்ட 17 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. முடிவில் சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.வெங்கடபதி நிறைவுரையாற்றினார்.