நாமக்கல், ஜூன் 18- கூட்டுறவு சங்கத்தில் முறையாக வழங்கப்படாத வைப்பு கால நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி கைத்தறி நெசவாளர் கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டம், மல்லசமுத்திரம் நெம் பர்.எஸ்.1271, பெரியகொல்லப்பட்டி யில் கைத்தறி நெசவாளர்கள் கூட்டு றவு மற்றும் விற்பனையாளர் சங் கம் உள்ளது. இச்சங்கத்தில் 1,500க் கும்மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் கைத்தறிகளுக் குபாவு, நூல் உள்ளிட்டவைகளை எடுத்து நெசவு செய்து வந்தனர். இந்நிலையில் இச்சங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையாக பாவு, நூல் உள்ளிட்டவை கள் வழங்கவில்லை. இதேபோல், கடந்த ஐந்து வருடங்களாக ஓய்வூ தியம், வைப்புத் தொகையும் முறை யாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வரு கின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் வைப்பு கால நிதியையும், ஓய்வூதியமும் தொடர்ந்து வழங்க வேண்டும். மேற்கொண்டு நெசவுத்தொழில் செய்திட அதற்கான உபகரணங் கள் வழங்க வேண்டும் என வலியு றுத்தி கூட்டுறவு உறுப்பினர் பழனி யப்பன் தலைமையில் 30க்கும் மேற் பட்டோர் திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர்.