பொள்ளாச்சி, அக்.26- வால்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் தற்காலிக பணிமனை பேருந்து நிலை யத்தில், அடிப்படை வசதிகளை ஏற்படுத் தித் தர வேண்டும் என சிஐடியு தொழிற்சங் கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, வால்பாறை தேயி லைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் (சிஐடியு) கோவை மாவட்ட செயலாளர் பி.பரமசிவம் மாவட்ட ஆட்சியருக்கும், வால்பாறை அரசுப் போக்குவரத்து கழகத்திற்க்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வால் பாறை பகுதியில் காந்தி சிலை அருகே அரசுப்பேருந்து நிலையம் அமைந்துள்ளது. தற்போது அங்கு மேற்கொள்ளப்படுகின்ற பராமரிப்பு பணி காரணமாக பேருந்துகள் அனைத்தும் பணிமனை முன்பு நிறுத்தப் பட்டு, தற்காலிக பேருந்து நிறுத்தமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் இருக்கை வசதிகள், குடிநீர், கழிப்பிட வசதி, பேருந்து நேர கால அட்டவணை என எதுவுமில்லை. இப்படி எவ்வித அடிப்படை வசதியுமின்றி உள்ளதால், இப்பேருந்து நிலையத்தினை பயன்படுத்தும் பயணிகள், பெரும் அவதிக் குள்ளாகின்றனர். எனவே, வால்பாறை அரசுப்போக்குவரத்து கழகம் பொதுமக்க ளின் நலனை கருத்தில் கொண்டு மேற் கண்ட அடிப்படை வசதிகளை உடனடி யாக ஏற்படுத்திதர வேண்டும். இதன் மீது மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென அக்கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார்.