tamilnadu

img

மேம்பால பணிகளுக்காக நிலத்தை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கிடுக பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

கோவை, அக். 14 –  கோவை சுங்கம் பைபாஸ் சாலை ஏரிமேட்டில் 30 ஆண்டுக ளுக்கு மேலாக குடியிருக்கும் மக்கள், மேம்பாலப் பணிகளுக் காக நிலத்தை காலி செய்கிற போது மாற்று இடம் வழங்க வேண் டும் என பி.ஆர்.நடராஜன் எம்.பி.,  வலியுறுத்தியுள்ளார். கோவை சுங்கம் பைபாஸ் சாலையையொட்டிய ஏரிமேட் டில் 150க்கும் மேற்பட்ட குடியி ருப்புகளில் ஏழை, எளிய மக்கள்  30 வருடங்களுக்கு மேலாக வசித்து  வருகின்றனர். இவர்களின் வாழ் வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி அனைத்தும் நகரத்தை யொட்டியே அமைந்துள்ளது. இந்நிலையில் திருச்சி சாலை யில் கட்டப்பட்டு வரும் மேம்பா லத்தின் ஒரு பகுதி சுங்கம் பைபாஸ்  சாலையை இணைக்கும் பகு தியாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், இக்குடியிருப்புகளை காலி செய்ய அதிகாரிகள் நோட் டீஸ் அளித்துள்ளதால், அங்கு  வசித்து வரும் மக்கள் நிற்கதி யாகியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் சென்று அப்பகுதி மக்களை சந்தித்தார். இதன்பின் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்பதை  வலியுறுத்தும் வகையில் கோவை  மாவட்ட ஆட்சியரை சந்தித்து  முறையிடுவது என முடிவெடுக்கப் பட்டது. இதன்தொடர்ச்சியாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகனை புதனன்று பி.ஆர்.நடராஜன் எம்.பி., தலைமையில் பாதிப்புக்குள் ளான மக்கள் சந்தித்து முறை யிட்டனர். இதன்பின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் செய்தியாளர்களிடம் கூறு கையில், மேம்பாலப் பணிகளுக் காக சுங்கம் ஏரிமேடு பகுதியில்  குடியிருக்கிற 150க்கும் மேற்பட்ட  குடியிருப்புகளை காலி செய்யச்  சொல்லி நெடுஞ்சாலைத்துறை, குடிசை மாற்று வாரியம், மாவட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வரு கிறது. வாழ்வாதாரத்திற்கே பெரும் போராட்டத்தை நடத்தும்  இப்பகுதி மக்கள் குடிசை மாற்று  வாரியம் வீடு கட்டி தருகிற வரை யில் வெளியில் போய் வீட்டு வாடகை, அட்வான்ஸ் போன்ற வற்றை எதிர்கொள்வது முடியாத  நிலை உள்ளது.

ஆகவே, குடிசை  மாற்று வாரியம் வீடுகளை ஒப்ப டைக்கும் வரை இங்கேயே  வசிப்பது என்பதை அதிகாரிகளி டம் தெரிவித்துள்ளோம். அதிகா ரிகளும், தற்போது 48 வீடு களை மட்டும் காலி செய்து கொடுத் தால் அவர்களுக்கு உடனடியாக  மாற்று இடம் தருவதாகவும், அனைத்து பகுதி மக்களுக்கு வீட் டிற்கான உத்தரவாதம் கொடுப்ப தாகவும், அதுவரை அவர்கள் அப்பகுதிலேயே வசிக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.   மேலும், மாவட்ட ஆட்சியரி டம் பேசி உரிய தீர்வை ஏற்படுத்தி  தருவதாக அதிகாரிகள் உறுதிய ளித்துள்ளனர். கோவை நகரத் தின் வளர்ச்சிக்கும், கட்டமைப் பிற்கும் உழைத்திட்ட இந்த உழைப்பாளி மக்களை எவ்வித உத்தரவாதம் இல்லாமல் அப்பு றப்படுத்தக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கி றோம் என்றார்.  முன்னதாக அதிகாரிகளுட னான சந்திப்பின்போது சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் மற்றும் மூர்த்தி, அழகப்பன், விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.