tamilnadu

புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கோவை, ஜூலை 25- புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி வியாழனன்று கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.   புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்தும், சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார் பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும் கோவையில் மருதமலை அருகே உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரி யின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து  மாணவர்கள் கூறுகையில், “புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட் டால், கல்வி அமைப்பில் பல்வேறு சிக்கல்கள் உருவாகும். மேலும், 3,5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முறை கொண்டுவரப்படும். இதில், மாணவர்கள் தேர்ச்சிய டையாமல் போனால், இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக் கும். ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியாக மாற்ற மத்திய அரசு துடிக்கிறது என குற்றம் சாட்டினர்.  இதேபோல, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும், இந்தத் திட்டத்தினால், சுமார் 25ஆயிரம்  சதுர கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காற்று மற்றும் தண்ணீர் மாசுபடு வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.