tamilnadu

img

அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோபிசெட்டிபாளையம், ஆக. 28- அம்பேத்கர் சிலை உடைப்பை கண் டித்து கோபியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை உடைக் கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமி ழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர்   போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, கோபிசெட்டிபாளை யம் பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கர் சிலை உடைத்தவர்களை கண்டித்து தலித் அமைப்புகள் சார்பில் புதனன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடு தலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம், தமிழ்ப்புலிகள் மற் றும் பெரியார், அம்பேத்கர், மார்க்சிய அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில்,  சிலையை  உடைத்தவர்களை குண்டர் சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து சிலை உடைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதை தடுக்க தலைவர்களின் சிலைக ளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

;