tamilnadu

img

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, பிப்.6- பழங்குடியின சிறுவனை தனது செருப்பை கழட்ட வைத்த அமைச்சர் திண் டுக்கல் சீனிவாசனை கண்டித்து ஆனை மலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நீலகிரி மாவட்டம், முதுமலையில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவா சன், அங்கிருந்த பழங்குடியின சிறு வனை தனது காலில் கிடந்த செருப்பை கழட்டிட நிர்பந்தித்த சம்பவம் அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஆதிக்க சாதி மனப்பான்மையுடன் நடந்து கொண்ட அமைச்சரை உடனடி யாக பதவிநீக்கம் செய்திட வேண் டும். அவர் மீது  எஸ்.டி வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய  வேண்டும் என்று வலியுறுத்தி வியாழனன்று பொள்ளாச் சியை அடுத்த ஆனைமலை முக்கோ ணம் பகுதியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.எஸ்.பரமசிவம் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் கே.பத்மினி, கருத்தோவியம், சிறுபான்மை நல குழு உறுப்பினர் ஏ.எஸ்.முகமது மைதீன், சிபிஎம் கோவை மாவட்டக் குழு உறுப் பினர் ஏ.துரைசாமி ஆகியோர் கண் டன உரையாற்றினர்.  இந்த ஆர்ப்பாட்டத் தில் திரளானோர் பங்கேற்று அமைச் சர் திண்டுக்கல் சீனி0வாசனை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.