கோவை, ஆக. 18- ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் அனைவ ருக்கும் ரூ.15 ஆயிரம் வழங்கி டக்கோரி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. பெட்ரோல், டீசல் விலை உயர் விற்கு காரணமான வரிகளை குறைத்திட வேண்டும். இன்சூ ரன்ஸ், எப்சி, வங்கி மற்றும் தனி யார் நிதி நிறுவன கடன் வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கடன் தவணை கட்டுவதற்கு ஒரு வருடம் அவகாசம் வழங்க வேண்டும். கொரோனா தடை உத்தரவு காலத் தில் ஆட்டோ தொழிலாளர்கள் மீது பதிவு செய்த அனைத்து வழக்கு களையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார் பில் திங்களன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கோவை மாவட்டத்தில் சிஐடியு, எல்பிஎப், ஏஐடியுசி, எம்எல்எப், ரஜினி, தேமுதிக, எம்டிஎஸ், எஸ்டி டியு, எப்ஐடியு, எம்ஜேகே உள்ளி டக்கிய அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக்கமிட்டியின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஸ்டேண்டுகள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதில் அனைத்து ஆட்டோ கூட்டுக் கமிட்டியின் தலைவரும், சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான பி.கே. சுகுமாறன், சிஐடியு ஆட்டோ தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட தலை வர் இரா.செல்வம், கூட்டுக்கமிட்டி நிர்வாகிகள் ப.வணங்காமுடி, எம். கே.முத்துகுமார், ச.கார்த்திகேயன், ஷாசகான், அந்தோணி உள்ளிட் டோர் பங்கேற்று கோரிக்கை பதா கைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்
. சேலம்
சேலம் மாவட்டத்தில் அண்ணா பூங்கா ஆட்டோ ஸ்டேண்ட், ஐந்து ரோடு, புதிய பேருந்து நிலையம், சேலம் ஜங்சன், கோரிமேடு, அம் மாப்பேட்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார் பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.கே.தியாகராஜன், மாவட்ட செய லாளர் நாகராஜ், பொருளாளர் பாஸ் கர், துணைத்தலைவர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம், குன்னூர் வி.பி.தெருவில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யோகேஸ்வ ரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி மற்றும் அனைத்து ஆட்டோ சங்க நிர்வாகி கள் பலர் பங்கேற்று கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.