tamilnadu

img

சேலம் உருக்காலையை பாதுகாத்திடுக

சேலம், ஜூலை 29- சேலம் உருக்காலையை தனியா ருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில  இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட் டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற் றார். அப்போது அவர் பேசுகையில், சேலம் உருக்காலை காங்கிரஸ் கட்சி யினரால் கொண்டுவரப்பட்ட பொதுத்துறை நிறுவனம். இந்த நிறு வனத்தை தற்போதைய பாஜக அரசு தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி  மேற்கொண்டு வருகிறது. பண்டிட் ஜவஹர்லால் நேருவின் அயராத முயற்சியால் உருவான பலகோடி மதிப்புள்ள சேலம் உருக்காலையை ஒருபோதும் தனியாருக்கு தாரை வார்க்க அனுமதிக்க முடியாது. மத்திய பாஜக அரசு தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு தாரைவார்க்கும் முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. தற் போது மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை விற்கவும் முயற்சி மேற்கொள்வதாக தெரிகிறது. பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு,  பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்ப ளம்  நிலுவை, அலைக்கற்றை வழங்கு வதில் பாகுபாடு உள்ளிட்ட பிரச்சனை களால் தற்போது பிஎஸ்என்எல்லின் சேவை பாதிப்படைந்துள்ளது. மேலும், சேலை- சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை மக்களின் பயன்பாட்டிற்காக அவர்கள் செய்ய வில்லை. கார்ப்பரேட் வளர்ச்சிக்காக திட்டத்தை செய்ய நினைக்கிறார்கள்.  தமிழக முதலமைச்சர் சேலம் மாவட் டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மக்களுக்கு எதிரான இந்த திட்டங் களை எதிர்த்து மத்திய அரசிடம் வலி யுறுத்த வில்லை. மாறாக மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறார் என குற்றம்  சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், சேலம் சென்னை இடையிலான 8வழி சாலை  திட்டம் என்பது தனி ஒரு நபருக்காக அமைக்கப்படும் சாலை இந்த சாலை  அமைப்பதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே ஆர்வம் காட்டுவது சேலத்தில் உள்ள கனிம வளங்கள்  நிறைந்த கஞ்சமலை திருவண்ணா மலையிலுள்ள தாதுப் பொருட்களை வெட்டி எடுத்து நேரடியாக சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்வ தற்காக அமைக்கப்படும் சாலை தான் 8 வழிச் சாலை. ஆகவே 8 வழி சாலையை எதிர்த்து தொடர்ந்து காங்கிரஸ் கட்சி போரா டும். பொதுமக்களின் பயன்பாட்டிற் காக வருகின்ற திட்டத்தை மட்டுமே நாங்கள் ஆதரிப்போம்.  விவசாயத்தை யும் விளைநிலங்களையும் அழித்து போடப்படும் சாலையை எந்த சூழ் நிலையிலும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது. வேலூர் நாடாளுமன்ற தொகுதி யில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் அந்த வெற் றியை இன்றைய எழுதிவைத்துக் கொள்ளுங்கள் அதிமுக கூட்டணி டெபாசிட் கூட பெறாது எனத் தெரிவித்தார். இந்த உண்ணாவிரத போராட் டத்திற்கு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலா ளர் பி.ராமமூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன், விசிக மாநகர  மாவட்ட செயலாளர் கோ.ஜெயச் சந்திரன், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி  ஆ.ராஜா, காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.தேவதாஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன், குமாரமங்கலம் உள்ளிட்ட சேலம் உருக்காலை பாதுகாப்பு குழு நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர்.