திருப்பூர், மே 10-திருப்பூர், மங்கலம் சாலையில் உள்ள கடைகளில் 500 கிலோ தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் வியாழனன்று பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர், மங்கலம் சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருள்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. சில கடைகளில் மொத்த விற்பனை செய்யப்படுவதாகவும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகராட்சி நகர் நல அலுவலர் பூபதி தலைமையில், சுகாதாரத் துறை அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் அப்பகுதியில் உள்ள பேக்கரி, மளிகைக் கடை,மொத்த விற்பனைக் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது மொத்த விற்பனைக் கடையில் வைத்திருந்த 500 கிலோ பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். அந்தக் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.