tamilnadu

img

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: மேலும் ஒருவர் கைது

பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்தது நாடுமுழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களிடம் பழகி பின்னர் , கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய சபரிராஜன் (25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.


இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கிலும் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


;