tamilnadu

img

பிளாஸ்டிக் தடையில் குழப்பும் அதிகாரிகள்: மங்கலத்தில் வியாபாரிகள் கடையடைப்பு

 திருப்பூர், ஜூலை 24 - பிளாஸ்டிக் தடையை அமல்படுத்து வதில் வியாபாரிகளை குழப்பி, அலைக் கழித்து இழப்பு ஏற்படுத்தும் அதிகாரி களைக் கண்டித்து திருப்பூர் அருகே மங்கலம் கிராமத்தில் மூன்று மணி நேரம்  கடையடைப்புப் போராட்டம் நடத்தப் பட்டது. திருப்பூர் சோமனூர் சாலையில் மங்கலம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு  சுமார் 300 கடைகள், வியாபார நிறுவ னங்கள் உள்ளன. தமிழகத்தில் பிளாஸ்டிக்  தடை விதிக்கப்பட்டிருக்கும் சூழலில் அதி காரிகள் அவ்வப்போது திடீர் சோதனைக்கு வந்து பிளாஸ்டிக் பறிமுதல் செய்கின்றனர். அப்போது எந்த மாதிரியான பிளாஸ்டிக் வகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது, எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம் என வியாபாரிகள் கேட்கும்போது அதி காரிகள் பதில் கூறுகின்றனர். அதன்படி  மாற்று பொருட்களை வாங்கி வைத்தால்,  மறுமுறை வேறு அதிகாரிகள் சோதனை  என்ற பெயரில் வந்து அந்த பொருட் களையும் அழிக்கின்றனர். இதனால் வியாபாரிகளுக்கு பொருள் மற்றும் பண இழப்பும், தேவையற்ற மன உளைச்சலும், நிம்மதியாக வியாபாரம் செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது. எனவே பிளாஸ்டிக் தடைப் பட்டியலை வெளிப்படையாக தெளிவாக வியாபாரிகளுக்கு எழுத்துப் பூர்வமாக அறிவிக்க வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை களிலேயே தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.  அதன்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி  நேரம் மங்கலம் சுற்று வட்டாரத்தில் வியா பாரிகள் கடையடைப்பு நடத்தினர். இதில் இந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. கடையடைப்புப் போராட்டத்தின் போது மங்கலம் சமுதாய நலக்கூடத்தில் வியாபாரிகள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வியா பாரிகள் யாரும் நொய்யல் ஆற்றில் எந்த கழிவுகளையும் கொட்டுவதில்லை. ஆடு, கோழி, மாட்டு இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு உள்ளாட்சி நிர்வாகம் குறிப்பிட்ட இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும். பிளாஸ்டிக் ஓழிப்பு பெயரில் வரும் அதிகாரிகள் எந்த பொருள் தடை என  தெளிவாக விளக்க வேண்டும். கடை களுக்கு உள்ளே ஊழியர் இல்லாமல் பொருள்களை எடுக்க கூடாது. தினமும் பஞ்சாயத்து நிர்வாகம் கடைகளின் கழிவு களை எந்த ஓரு நிபந்தனையும் இன்றி அப்புறப்படுத்த வேண்டும் என தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத் தலைவராக பட்டி மு.முஸ்தபா, செய லாளராக மு.ரபிதீன், பொருளராக நி. முகமது ஆசிக் அலி ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.