கோவை, மே 13 – நிரந்தரப்பணியற்ற தூய் மைப் பணியாளர்கள் அனை வரையும் நிரந்தரம் செய் திட வலியுறுத்தி கோவை யில் பல்வேறு இடங்களில் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும். ஒப்பந்தப் பணியாளர் கள், சுய உதவிக்குழுப் பணியாளர்கள், அனைத்து தினக்கூலி ஒப்பந்தப் பணியாளர் கள் என அனைவரையும் நிரந்தரம் செய்திட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் நிர்ண யிக்கவும், கொரோனா தொற்றில் பாதிக்கப் பட்டு மரணமடைந்த தூய்மை பணியாளர்க ளுக்கு அரசு ரூ.50 லட்சம் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத் தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். கோவை மாநகராட்சி பகுதிகளில் நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார் மற்றும் நிர்வா கிகள் ராஜாக்கனி, எம்.வீராசாமி, நாராய ணன், ஜி.வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்று உரையாற்றினர்.