tamilnadu

img

திருப்பூர் 3ஆவது வார்டில் சாலை, தெருவிளக்கு பழுது முதல் மண்டல அலுவலகத்தில் மக்கள் கோரிக்கை மனு

திருப்பூர், ஜூன்  20 - திருப்பூர் மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, சாக் கடை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் முதல் மண்டல அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு  ஒன்றியச் செயலாளர் கே.பழனிச் சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.மாரப்பன், என்.கோபால் மற்றும் கிளைச் செயலாளர்கள் பாண்டுரங்கன், மகேந்திரன் ஆகி யோருடன் சுமார் 75 பேர்  வியாழனன்று  முதல் மண்டல  அலுவலகத்திற்கு வந்தனர்.  இங்கு இளநிலைப் பொறி யாளரிடம் அவர்கள் அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது:  சஞ்சீவி நகர் முதல் வீதியில் 25  அடி அகலமுள்ள 900 அடி நீள முள்ள வீதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது தார்ச்சாலை பழுதடைந்து புதர் மண்டிக் கிடக்கிறது. ஆக்கி ரமிப்பும் அதிகமாக உள்ளன. தார்ச்சாலையும் குண்டும், குழியு மாக இருப்பதால் பொது மக்கள், வாகனங்கள் செல்ல முடியாத நிலை  உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு களை அகற்றி தார்ச்சாலையை செப்பனிட்டுத் தர வேண்டும். இந்திராநகர் தென்புரத்தில் 6,7 ஆவது தெருவில் மண் சாலையைத் தார்ச்சாலையாக மாற்றித் தர வேண்டும். 9ஆவது வீதி சாலையையும் சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்  கொண்டனர். இதேபோல்தந்தை பெரியார்  காலனி, பேரறிஞர் அண்ணா காலனி ஆகிய இரு பகுதிகளில்  சாலை வசதி மோசமாக இருப்ப தால் அங்கும் தார்ச்சாலை  அமைத்துத் தர வேண்டும். எம்எஸ்எம் நகர் பகுதி அருகில் பாறைக்குழியில் தேங்கும் கழிவு நீரை அகற்றி சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா நெசவாளர் காலனியில் உள்ள பூங்காவை மக்கள் பயன் பாட்டுக்குத் திறந்துவிட வேண்டும். பெரியார் காலனி ஆரம்ப சுகாதார மையத்தில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். ஐஸ்வர்யா நகர் பகுதியில் தெரு விளக்கு வசதி இல் லாததால் சமூக விரோத செயல் அதிகரிக்கும் ஆபத்துள்ளது. எனவே  இப்பகுதியில் தெருவிளக்கு அமைத்துத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி யளித்தனர்.