tamilnadu

மக்கள் தோழனாய் கே.தங்கவேல்

மக்கள் மனத்தில்...
நீக்கமற நிறைந்த தோழன் நீ...
என்பதை.. தீக்கதிரின்.. திருப்பிய 
பக்கமெல்லாம்...பறை சாற்றியது!
புன்னகை மாறா பொறுமைசாலி!
அறிவால்... ஆளுமைத் திறனால்...
கொள்கை பிடிப்பால்..
அடித்தட்டு மக்களையும் படியேற்றும்
அந்தி பகல் பாராத... அயராத உழைப்பால்...
பொறுப்புகளைப் பெற்றபோதும்...
மக்கள் தொண்டனாய்... மார்க்ஸீயவாதியாய்...
எப்பழியும் அண்டாத எளியனாய்...வாழ்ந்தாய்!
உன் வாழ்க்கை எமக்குப் பாடம்!
திருப்பூரின்... பெருங்குரலே...
உன் எதிரொலி... உழைக்கும் 
மக்களின்... காதுகளில்..
என்றென்றும்...
உரிமைக் குரலாய்..
ஒலித்துக்
கொண்டேயிருக்கும்!
KT மறைந்த போதும்...
கேட்டுக் கொண்டேயிருக்கும்!
- வத்சலா ரமணி

;