tamilnadu

சூலூரில் மக்கள் தொடர்பு முகாம்

கோவை, பிப்.12- கோவை மாவட்டம், சூலூர் வட்டம், பீடம் பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலு வலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டம், சூலூர் வட்டம், பீடம்பள்ளி கிராமத்தில் உள்ள ஜெயம் மஹாலில் வருகின்ற பிப்.19 ஆம் தேதியன்று காலை 10.30 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமை ஏற்கவுள்ளார். மேலும், இம்முகாமில் பொதுமக்கள் அனை வரும் கலந்து கொண்டு தங்களுக்கான கோரிக் கைகளைத் தெரிவித்து தீர்வுபெறவும், அரசு நலத்திட்டங்கள் குறித்த விவரங்கள் பெற்று பயனடையவும் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

;