தருமபுரி, டிச.19- ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என நாட்டுப்புறக் கலைஞர் கள் வலியுறுத்தி உள்ளனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில், புதனன்று நாட்டுப்புறக் கலைஞர் களின் ஆண்டு விழா, அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் லட்சுமணன் தலை மையில் நடைபெற்றது. இவ்விழாவில், தென்னிந்திய கலைஞா்கள் பங்கேற்று, தெருக்கூத்து, தப்பாட்டம், உடுக்கை, பம்பை, கோலாட்டம், ஒயிலாட்டம், தவில், நாதஸ்வரம், முதலிய கலைகளை நிகழ்த்தியவாறு நூற்றுக்கணக்கானோர் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு திரௌபதியம்மன் கோயில் வரை சென்றனா். இதைத் தொடா்ந்து, அங்கு மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசின் குரு-சிஷ்யா திட்டம் தமிழகத்தில் விரிவுப்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற கலைஞா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். அரசு பதிவுபெற்ற கலைஞா்களுக்கு இலவச இசைக்கருவிகள் வழங்கிட வேண்டும். இலவச பேருந்து பயண அட்டை வழங்கி, ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம் உயா்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.