சேலம், நவ.21- ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனியார் அறக்கட்டளை மூலம் ரூ.86 லட்ச செலவில் நூலகம் மற்றும் நவீன சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலையில் சுமார் 2,800 மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர் களுக்கு போதிய கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் சிதைந்த கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டு வந்தது. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் மாணவிகள் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந் நிலையில் ஆத்தூரில் உள்ள தனியார் விதை நிறுவன அறக்கட்டளையினர் மாணவிகள் நிலை அறிந்து பள்ளி வளாகத்தில் ரூ.40 லட்ச ரூபாய் செலவில் நவீன சுகாதார வளாகம், ரூ.10 லட்சம் செலவில் குடிநீர் வசதி, ஒரே நேரத்தில் 100 மாணவிகள் அமர்ந்து படிக்கும் வகையில் ரூ.36 லட்ச மதிப்பில் நவீன நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்திற்கு 12 ஆயிரத்திற்கும் மேற் பட்ட புத்தகங்கள் வழங்கினர். இதன் திறப்பு விழா வியாழனன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு தனியார் விதை நிறுவன அறக்கட்டளை தலைவர் ராசி ராம சாமி தலைமை தாங்கினார். ஆத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்தம்பி கலந்து கொண்டு நவீன சுகாதார வளாகம் மற்றும் நவீன நூலகத்தை மாணவிகளின் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார். இவ்விழா வில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண் டார்கள்.