tamilnadu

img

கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு – ஆட்சியரிடம் மனு

கோவை, டிச. 23 -  கல்குவாரி அமைப்பதற்கு வழங் கிய ஆணையை ரத்து செய்ய வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். கோவை, செட்டிபாளையம் பேரூ ராட்சி, ஓராட்டுக்குப்பை கிராம பொது மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தினர் தங்கள் பகுதியில் அமைய இருக்கும் கல்குவாரி ஆணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், இப்பகுதியில் ஏற்கனவே ஆறு கல்குவாரிகள் அமைந்துள்ளது.  இதன்காரணமாக பொதுமக்கள்  மற்றும் விவசாயிகள் பெரும் அவதிக் குள்ளாகி வாழ்வாதாரம் பாதிக்கப்பங டுள்ளது. இந்நிலையில் 2018 முதல்  2023 வரை அல்ட்ரா ரெடி மிக்ஸ் என்ற  தனியார் நிறுவனத்திற்கு குவாரி அமைக்க அனுமதிவழங்கி ஆணை  அளிக்கப்பட்டு இருப்பதாக தெரி கிறது. விவசாய நிலங்கள், 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ள பகுதியில் கல்குவாரி அமைந் தால் முற்றிலும் தென்னை  விவ சாயம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மாசுபாடு ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில், முந்நூறு மீட் டர் தூரம் தாண்டி அமைக்க வேண்டு மென்ற விதிமுறையை மீறி அனு மதி வழங்கி இருப்பதாக குற்றம் சாட்டினர்.   மேலும், கல்குவாரிகளில் இருந்து வரும் துகள்களால் ஏற்கனவே 600க் கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிப்பு ஏற்பட்டு, வெட்டப்பட்டு விட்டதாகவும் கல்குவாரிகளில் வைக் கப்படும் வெடிகள் காரணமாக அதிர்வு ஏற்பட்டு வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள் ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியி டம் முறையிட்ட போது உரிய நடவ டிக்கைகள் எடுக்கப்படும் என தெரி வித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்த கல்குவாரி ஆணையை ரத்து செய்யாவிட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ள தாக தெரிவித்தனர். முன்னதாக, இப்பகுதி மக்களின் சார்பில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகி கண்ணுசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வி.பி.இளங் கோவன் உள்ளிட்டோர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர்.