tamilnadu

img

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதை எதிர்த்து

மருத்துவர்கள் வேலைநிறுத்தம், கண்ணில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 31- தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதை எதிர்த்து இந்திய மருத்துவர் சங்கம், அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் தருமபுரி,  சேலம், நாமக் கலில் கண்ணில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பாஜக மோடி அரசு இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை கொண்டு வந்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் கலைக் கப்பட்டதை வன்மையாக கண்டித் தும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவிகித இடங்களுக்கு தாங்களே கட்டணம் நிர்ணயம் செய்து கொள்ள லாம் என்ற முடிவு ஏழைகளுக்கு எதிரா னது. மேலும், இறுதியாண்டுத்தேர்வு (நெக்ஸ்ட்)  மதிப்பெண் அடிப்படை யில் மேல்படிப்பு இடங்கள் நிரப்பப்ப டும் என்ற அறிவிப்பில் எத்தனை முறை மாணவர்கள் மீண்டும் முயற்சி செய்ய லாம் என்பது தெளிவாக இல்லை. எனவே, நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பிரிவு 32 -ல், சமூதாய மருத்துவ உதவி அளிப்பவர் என்ற பிரிவில் நவீன மருத்துவ பிரி வினை சேர்த்து அனைவருக்கும் மருத் துவ சிகிச்சையளிக்கலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு போலி மருத்துவர்களை உருவாக்கும் இத னால் தரமான சிகிச்சை கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த முடிவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி புதனன்று 24 மணி நேர வேலை நிறுத்தம், அவசர மருத் துவ சேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகள், புறநோயாளிகள் பிரிவு சிகிச்சை உட்பட புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக தருமபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்து வர்கள் சங்க மாநில துணைத் தலை வர் மருத்துவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். தருமபுரி கிளை செயலாளர் மருத்துவர் கோகுல், அரசு டாக்டர்கள் சங்க மாவட்டத் தலைவர் மருத்துவர் சந்திரசேகர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத் தில் அரசு மற்றும் தனியார் மருத்து வர்கள், மருத்துவ கல்லூரி மாணவர் கள், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சேலம்

இதேபோல், சேலத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தின் முன்பு இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரகாசம் தலை மையில் ஏராளமான மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மருத்துவ கழகத்தை கலைப்பதை கண்டித்தும், மருத்துவ துறைக்கும், பொது மக்க ளுக்கும் எதிரான இந்த புதிய தேசிய மருத்துவ ஆணையத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

நாமக்கல்

நாமக்கல் அரசு  மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ சங்க மாவட்ட தலைவர் மருத்துவர் ரங்கநாதன்  தலைமை யில் கண்ணில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராசிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் மருத்துவர் கேப்டன் சதாசிவம், செயலாளர் சுகவனம், பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் வெங்கடேஷ் குமார், செயலாளர் ராஜா, பொருளா ளர் பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டு 24 மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.