மே.பாளையம், ஆக. 2- மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்த கிரி செல்லும் மலைப்பாதையில் காட்டு யானைகள் தாக்கியதில் அடையாளம் தெரி யாத நபர் உயிரிழந்துள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் உள்ள மலை சார்ந்த பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக ரித்து வருகிறது. இப்பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் மழை பெய்து வருவதால் யானைகள் கூட் டம் கூட்டமாக மலையில் இருந்து கீழ் நோக்கி சமவெளி பகுதிக்கு இடம் மாறி வரு கின்றன. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை மற்றும் கோத்தகிரி செல் லும் மலைப்பாதைகளில் அடிக்கடி யானை கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறும், மாலை ஐந்து மணிக்கு மேல் யாரும் இவ் வழியே பயணிக்க வேண்டாம் எனவும் வனத் துறை எச்சரித்து வருகிறது.
இதற்கிடையில் ஞாயிறன்று அதிகாலை மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலை யில் இரண்டாம் கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோரம் நாற்பது வயது மதிக் கத்தக்க ஒரு ஆணின் சடலம் கிடப்பதை அவ்வழியே சென்றவர்கள் கண்டனர். இதுகுறித்து காவல்துறை மற்றும் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் ஆய்வு நடத்திய தில் இறந்து கிடந்த நபர் யானைகள் தாக்கிய தில் பலியானது தெரிய வந்தது. இதனைய டுத்து உடலை மீட்ட வனத்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக மேட்டுப்பாளை யம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும், அந்நபர் யார்? என்பது தொடர்பான விசாரணையை மேற் கொண்டு வருகின்றனர்.