tamilnadu

img

அசத்தும் மலைக்கிராம அரசுப்பள்ளி

மே.பாளையம், மே 13-தேசிய அளவில் நடத்தப்படும் ஜெ.இ.இ தேர்வில்வெற்றி பெற்று அரசுப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.தமிழக கேரள எல்லையோரத்தில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள, மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வெள்ளியங்காடு என்னும் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் செயல்பாடும் கற்பித்தலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. மலைக்காட்டின் நடுவே உள்ள பில்லூர் அணையை சுற்றியுள்ள முப்பதிற்கும் மேற்பட்ட பழங்குடியின மலைக்கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களை ஊக்குவித்து சிறந்த கல்வியினை கொடுப்பதோடு அவர்களை விளையாட்டு, அறிவியல் என அனைத்து வகையிலும் மேம்படுத்தி பெருநகரங்களில் இயங்கும் பெரிய தனியார் பள்ளிகளில் பல்வேறு வசதிகளோடுபயிலும் மாணவ மாணவிகளோடு போட்டியிடும் அளவிற்கு இந்த அரசுப்பள்ளியின் செயல்பாடு அமைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் நூறு சதவிகிதம் தேர்ச்சியினை பெற்று வரும் இந்த அரசுப்பள்ளி பல திறமையான மாணவர்களை உருவாக்கி வருகின்றது. எப்போதும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள மலைக்கிராமங்களில் இருந்து பல்வேறு சிரமங்களுக்கிடையே பழங்குடியின மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் இங்கு கல்வி கற்க வருகின்றனர். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஜப்பான் – ஆசிய மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் இருந்து அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கும் 96 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு கடந்தாண்டு ஜப்பானுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதில் இந்த பள்ளியில் தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் காளியப்பனூர் என்னும் மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி எம்.சபிதாவும் ஒருவர். 

இந்நிலையில், தேசிய அளவில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மத்திய மேல் என்றழைக்கப்படும் இந்த கூட்டு தேர்வு ஜெ.இ.இ மெயின் மற்றும் ஜெ.இ.இ அட்வான்ஸ் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. என்.ஐ.டி மற்றும் ஐஐடி போன்றவற்றில் சேருவதற்கு ஜெ.இ.இ மெயின் தேர்வில் வெற்றி பெற்றால் போதுமானது. ஆனால் ஐஐடி யில் சேரமெயின் மற்றும் அட்வான்ஸ் என இரு தேர்விலும் வெற்றி பெற்றாக வேண்டும். ஜெ.இ.இ மெயின் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே அட்வான்ஸ் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதில் வெற்றி பெறுவதன் மூலம் ஐஐடி பிஹெச்யுமற்றும் ஐஎஸ்எம் தன்பாத் போன்ற உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்விகற்கலாம். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் நடத்தப்படும் இத்தேர்வில் அப்ஜக்டிவ் முறையில் இயற்பியல், வேதியல், கணிதம், காரணமறிதல், திறனரிதல், புரிதல், பகுப்பாய்வு போன்ற தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்படும். தவறான பதிலுக்குமைனஸ் மார்க் வழங்கப்படும் என்பதால் இத்தேர்வினை மிக கவனமாக எழுத வேண்டும். பெருநகர தனியார் பள்ளிகளில் குறிப்பாக சி.பி.எஸ்.சி கல்வித்திட்டத்தில் பயின்று பல்வேறு தொழில் நுட்ப வசதிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி சார்ந்த வசதிகள் மற்றும் மிகச் சிறந்த கல்வியாளர்கள் நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கூட தோல்வியடையும் இத்தேர்வில், வெள்ளியங்காடு என்னும் கடைக்கோடி மலைக்கிராம அரசுப்பள்ளியில் பயிலும் சபிதா, ஷாலினி மற்றும் பிரசாந்த் ஆகிய மூன்று பேர்வெற்றி பெற்றிருப்பது அசாதாரணமாகவே பார்க்கப்படுகிறது. இவர்கள் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜெ.இ.இ அட்வான்ஸ் தேர்விலும் பங்கேற்க உள்ளனர்.மின்சாரம், குடிநீர், சாலைவசதி என பல்வேறு அடிப்படை வசதிகள் இன்னமும் கூட முழுமையாக சென்றடையாத அடர்ந்த காட்டின் நடுவே உள்ள மலைக்கிராம மாணவ, மாணவிகளின் இந்த வெற்றி அவர்களின் கடின உழைப்பு, கல்வி மீதுள்ளஆர்வம் மற்றும் அரசு பள்ளியின் ஆசிரியப் பெருமக்களின் ஒத்துழைப்பு போன்றவற்றால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது என்றால் அது மிகையல்ல.நிலை கல்வி வாரியத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவு தேர்வான ஜெ.இ.இ தேர்வில் இப்பள்ளியை சேர்ந்த இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு (joint entrance examination –JEE)