tamilnadu

கோவை அரசு மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் கடைபிடிப்பு

கோவை, அக். 22 - கோவை அரசு மருத்துவனை மருத்துவர்கள் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அக்டோபர் மாதத்தை கடைபிடித்து வருகின்றனர். இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனையின் புற்று நோய் அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ் வெங்கடா சலம் கூறியதாவது, அக்டோபர் மாதமானது பிங்க்டோபர் மாதம் என உலக மார்பகப் புற்றுநோய் மாதமாக வரு டந்தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சாதாரண மாகவே புற்றுநோய்க்கட்டி 2 செ.மீ வளர்வததற்குள் கண்டுபிடிக்கப்பட்டால் எளிதில் குணப்படுத்தலாம். குறிப்பாக மார்கப் புற்றுநோயை விரைவில் குணப்படுத்த முடியும். இதனை மார்பக சுயபரிசோதனை மூலமாகவோ அல்லது மெமோகிராம் பரிசோதனை மூலமாகவோ எளி தாக கண்டறியலாம்.  

ஆகவே, மெமோகிராம் பரிசோதனையை 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் வருடந்தோறும் மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆரம்ப நிலையிலேயே மார்ப கப் புற்றுநோய் கண்டறியப்பட்டால் கட்டியை மட்டும் அகற்றி விடலாம். இல்லையெனில் மார்பகத்தையே அகற்ற வேண்டிவரும். இது நோயாளிகளுக்கு தேவையற்ற மன அழுத்தத்தைக் கொடுக்கும். கோவை அரசு மருத்துவ மனையில் இந்த பரிசோதனைகள் பிரத்யேகமாக நடத்தப் படுகின்றன. எனவே, பெண்கள் இப்பரிசோதனையை இங் கேயே மேற்கொள்ளலாம். ஆகவே, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இளஞ்சிவப்பு (பிங்க்) வண்ண ரிப்பனை இம்மாதம் முழுவதும் அனைத்து மருத்துவர்களும் அணிந்து வருகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.