tamilnadu

img

குறைந்தபட்சம் ரூ.7,850ஐ ஓய்வூதியமாக வழங்கிடுக

சேலம், ஜூலை16- குறைந்தபட்சம் ரூ.7 ஆயி ரத்து 850 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம், நாமக்கல்லில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசின் சத்து ணவுத் திட்டத்தில் 35 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற் றுள்ள சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர்களுக்கு சிறப்பு  ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் மட் டும் வழங்குவது ஊழியர்கள் மத் தியில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவப்படி, மருத்துவ காப்பீடு, இலவச பஸ் பாஸ், ஈமக்கிரைய செலவு நிதி ஆகிய ஓய்வு கால பணப்பலன் களை வழங்கிட வேண்டும் என் பன  உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங் கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் ஏராளமான ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஊழியர்கள் கலந்து கொண் டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமி ழக அரசை கண்டித்தும், தமிழக சத்துணவு துறையை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். 

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.பழனியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர் வாகிகள் லட்சுமணன், லட்சுமி, ராஜி ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்ட பொருளாளர் ஆர்.செல்வாம்பால் வரவேற் புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் கு.ராஜேந்திரபிரசாத் ஆர்ப் பாட்டத்தை துவக்கி வைத்து பேசி னார். பொது சுகாதார ஊழியர் சங்க மாநில செயலாளர் குப்பு சாமி வாழ்த்திப் பேசினார்.  எரு மப்பட்டி நல்லம்மாள், பரமத்தி மல்லிகா, கொல்லிமலை பழனி யப்பன், கருணாம்பிகை உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.