tamilnadu

img

பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத என்டிசி நிர்வாகம்

போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு

கோவை, மே. 8 –  என்டிசி பஞ்சாலையில் பணியாற்றும்  தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதி யத்தை உடனடியாக வழங்கப்படாவிட் டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. என்டிசி பஞ்சாலைகளின் தொழிற்சங் கங்களான எல்பிஎப், சிஐடியு, ஏடிபி ஆகிய  தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று நடை பெற்றது. கோவை காட்டூர் மில் தொழி லாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எல்பிஎப் பார்த்தசாரதி, சிஐடியு சி.பத்மநாபன், ஏடிபி கோபால் உள் ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதன் பின் சிஐடியு மில்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.பத்மநாபன் கூறுகை யில், தமிழகத்தில் ஐந்து என்டிசி பஞ்சாலை கள் உள்ளன. இதில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப் படவில்லை. ஊரடங்கு காலத்தில் போராட் டம் நடத்துவது அவசியமற்றது என்பது தான் தொழிற்சங்கங்களின் எண்ணமும்.  ஆனால், கொரோனா ஆபத்தை விட  ஊதியமின்றி தவிக்கும் தொழிலாளர்களின் நிலை மிக கொடூரமாக உள்ளது. ஆகவே,  வேறுவழியின்றி போராட்டத்திற்கு தள்ளப்படும் சூழல் தொழிற்சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக என்டிசி  தொழிலாளர்களுக்கு ஊதியம் தரப்படா விட்டால் வருகிற புதன்கிழமையன்று அனைத்து தொழிலாளர்களையும் திரட்டி போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

இதேபோல், தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் தரவேண்டிய ஊதியம் தரப்ப டாமல் உள்ளது. மேலும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு, கட்டாய விடுமுறை ஆகிய வற்றை தொழிலாளர்கள் மீது திணித்துள் ளது. இத்தகைய நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  ஆட்குறைப்பு செய்வது, வெளிமாவட்ட தொழிலாளர்கள் திரும்ப வருவதற்கு பாஸ் கொடுக்க வேண் டும். மாநகரப்பகுதியில் சிறு, குறு தொழில்  நிறுவனங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும். நலவாரியத்தில் வழங்கப்ப டும் நிவாரண தொகையை அதிகப்படுத்தி  அனைவருக்கும் தருவதை உறுதிப்ப டுத்த வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங் கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி மனு அளித்தனர். இதில் ஐஎன்டி யுசி வி.ஆர்.பாலசுந்தரம், ஏஐடியுசி எம்.ஆறு முகம், எல்பிஎப் கே.எம்.தண்டபாணி, எச்எம்எஸ் க.வீராசாமி, சிஐடியு எஸ்.கிருஷ் ணமூர்த்தி, எம்எல்எப் மு.தியாகராஜன், ஏஐசிசிடியு ஆர்.தாமோதரன் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.