திருப்பூர், அக். 1 - திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த நந்த கோபால் செப்டம்பர் 30ஆம் தேதி திங்களன்று ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய் யப்பட்டார். முத்தூர் பேரூராட்சி யுடன் மூலனூர் பேரூராட்சிக்கும் பொறுப்பு செயல் அலுவலராக நந்தகோபால் பணியாற்றி வந்தார். அவர் ஏற்கெனவே திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்குச் செயல் அலுவலராகவும், சாமளாபுரம் பேரூராட்சிக்கு பொறுப்பு செயல் அலு வலராகவும் பணியாற்றி வந்தார். திருமுருகன் பூண்டி மற்றும் முத்தூர் பேரூராட்சி களில் அங்கீகாராம் பெறாத வீட்டுமனைகளுக்கு கட்டிட அனுமதி வழங்கியது உள்ளிட்ட புகார்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் மாநில பேரூராட்சிகள் இயக்குநர் பழனி்சாமி துறை ரீதியான விசாரணை என்ற அடிப்படையில் 17 பி ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவில் இவரை பணியிடை நீக்கம் செய்ததாக தகவல் வெளியானது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விசாரித்தபோது, புதிய ஆட்சியர் விஜய கார்த்திகே யன் பொறுப்பேற்ற கடந்த புதன்கிழமை அன்று இவர் மீதான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கும் கோப்பு ஆட் சியருக்கு வந்ததாகவும், முதல் நாளிலேயே இதில் கையெழுத்திட வேண்டாம் என ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தாமதம் செய்து வெள்ளியன்று கையெ ழுத்திட்டதாகவும் நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப் பட்டது.