தருமபுரி, பிப்.28- அரூா் அரசு மருத்துவமனையில் சி.டி. மற்றும் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதிகளை ஏற் படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 90-க்கும் மேற்பட்ட அரசு துணை சுகாதார நிலை யங்கள், 18-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் சுமார் 4 லட்சம் மக்கள் வசிக் கின்றனா். மேலும், இப்பகுதியில் பழங் குடியின மக்கள், கிராமப்புற ஏழைகள், விவசாயிகள் அதிகளவில் உள்ளனா். இவா்கள் அரூா் அரசு மருத்துவமனை யையே நம்பியுள்ளனா். இந்நிலையில்,அரூர் வட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 1,500 புற நோயாளிகளும், 300 உள் நோயாளி களும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இதைத்தவிர, 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தாய்-சேய் நல மையம், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, குழந் தைகள் நலம், பல் மருத்துவம், பிரசவ கால முன், பின் கவனிப்பு சிகிச்சைப் பிரிவுகள், குடும்ப நலக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை மையம், சித்த மருத் துவம், கண் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் உள்ளன. இந்நிலையில், மருத்துவமனையில் பொது மருத்துவத்துக்கான சி.டி. மற்றும் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதிகள் இல்லை. இதனால், எலும்பு முறிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்படும் நோயாளிகள் ஸ்கேன் வசதிக்காக தருமபுரி அல்லது சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலையுள்ளது. இதனால், விபத்து உள் ளிட்ட அவசர சிகிச்சைகளை பெறும் நோயாளிகள் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, கிராமப்புற ஏழை மக்கள், பழங்குடியினா் உயா்தர மருத்துவ சிகிச்சை பெறும் நோக்கில், அரூா் அரசு மருத்துவ மனையில் சி.டி. மற்றும் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.