tamilnadu

img

காவலர் தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி

நாமக்கல், அக்.13- திருச்செங்கோட்டில், காவலர் தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி சனியன்று நடைபெற்றது.  காவலர் தினம் வருகிற அக்.21ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக  திருச்செங்கோட்டில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருச்செங்கோடு பழைய பேருந்து  நிலையத்தில் மாரத்தான் போட்டியை திருச் செங்கோடு புறநகர காவல் ஆய்வாளர் வெங்க டேசன் துவக்கி வைத்தார்.  இந்த மாரத்தான் பழைய  பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கு ரத வீதி,  வேலூர் ரோடு, வாலரை கேட் மற்றும் மலை சுற்றுப் பாதை வழியாகச் சென்று நாமக்கல்  சாலையில் நிறைவடைந்தது. சுமார் 5 கி.மீ.,  தூரம் கொண்ட இந்தப் போட்டியில் 13 பள்ளி  மற்றும் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.     இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் தனியார்  பொறியியல் கல்லூரியை சேர்ந்த  செல்வேந்திரன் முதலிடம் பிடித்தார். அரசு பள்ளியை சேர்ந்த தமிழரசன் இரண்டாமிடத்தையும், தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த இளவரசன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பெண்கள் பிரிவில் மகாதேவ வித்தியாலயம் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிகள் சரண்யா, சந்தியா, பத்தாம் வகுப்பு மாணவி சௌபத்ரா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு வரும் 21ஆம் தேதி காவலர் தினத்தன்று நாமக்கல்லில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.