districts

பிப். 12 காரைக்குடியில் மினி மாரத்தான் போட்டி

 சிவகங்கை,பிப்.9- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு அரசு  போக்குவரத்துக் கழகம்  (சிஐடியு)  சார்பாக மினி மராத்  தான் போட்டி பிப்ரவரி 12 காலை பிரம்மாண்டமாக நடை பெற உள்ளது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சம்மேளனத்தின்  பொதுச்செயலாளர் தெய்வீர பாண்டியன் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் கூறுகையில், சுற்றுப்புறச் சூழலை பாது காக்க வேண்டும். பொது போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மினி மராத்தான் போட்டி காரைக்குடியில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெறுகிறவருக்கு ரூ.3000, இரண்  டாம் பரிசு ரூ. 2000,மூன்றாம் பரிசு ரூ1000. ஆறுதல் பரிசு  மூன்று பேருக்கு  ரூ500 வழங்கப்பட உள்ளது.  பிப்ரவரி  12 காலை 6 மணிக்கு காரைக்குடி தேவர் சிலை அருகே  தொடங்குகிறது.ஆண்களுக்கு 6 கிமீ தூரத்திற்கும், பெண்  களுக்கு 3கிமீ தூரத்திற்கும் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.