tamilnadu

img

மேட்டுப்பாளையம்: பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கல்

மே.பாளையம், அக். 7- மேட்டுப்பாளையத்தில் வசித்து வரும் பழங்குடியின பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் சாதிச் சான்றிதழ்களை வழங்கினார்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் 25க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பழங்குடியின மக்களின் குழந்தைகளை பள்ளி சேர்க்கையின்போது சாதிச்சான்று  முக்கிய ஆவணமாக கேட்பதால் பல குழந்தைகள் பள்ளி யில் சேர்க்க முடியாத நிலை இருந்து வந்தது.

ஆகவே, தங்க ளுக்கு சாதிச்சான்று வழங்கக்கோரி நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதனைத்தொடர்ந்து பழங்குடியின மக்களின் நலனை  கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி உத்தரவின்பேரில், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு சாதிச்சான்று வழங்கும் நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இதில் சிறு முகை, சிக்கதாசம் பாளையம், நெல்லித்துறை, இலுப்ப நத்தம்,கெம்மாரம்பாளையம் உள்ளிட்ட மலை கிராமங்க ளைச் சேர்ந்த 17 மாணவ, மாணவிகளுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றுகளை கோவை வடக்கு வருவாய் கோட்டாட் சியர் சுரேஷ் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சாந்தாமணி, துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் யோகநாதன், யாசர் அராபத் விஜய குமார், கார்த்திகேயன், பஷீர் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.