tamilnadu

மே1 கிராம சபை கூட்டம் நடக்குமா!

ஈரோடு, ஏப். 26-தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் மே 1ஆம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெற வாய்ப்பு குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி மற்றும் மே தினம் ஆகிய தினங்களில் ஆண்டு தோறும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராமசபை கூட்டம் நடத்தப் படுவது வழக்கம். இந்த கூட்டங்களில் மக்களின் அடிப்படையில் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும், சிறப்பு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு செய்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும். இந்நிலையில் வருகின்ற மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுவது சந்தேகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கிராம சபை கூட்டம் நடப்பதில் சந்தேகம் உள்ளதாகவும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரையிலும் உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

;