அவிநாசி, பிப். 25- திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் குடிநீர் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர். திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலை யில் குடிநீர் கட்டணம் ரூ.150 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. இதனை உடனடியாகத் திரும் பப் பெற்று மாத குடிநீர் கட்டணமாக ரூ.50 நிர்ணயம் செய்ய வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்டிருக்கும் குடிநீர் இணைப்பு களை முறைப்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித் தனர். இதில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், நிர்வாகிகள் சுப்பிரமணி, பாலசுப்பிரமணி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் தேவராஜ், முன்னாள் வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.