சென்னையில் உள்ள பல கட்டுமானங்கள் பழமையானவை பாரம்பரியப் புகழ் மிக்கவை என்று பாதுகாக்கப்படுகின்றன. அல்லது புனரமைக்கப்படுகின்றன. சென்னை உயர்நீதிமன்றத் தலையீடு காரணமாகத் தப்பிப் பிழைத்தது - கடற்கரைசாலை காந்திசிலை எதிரே உள்ள காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம். பாரம்பரியத்தைப் பாதுகாக்க சட்டப் போராட்டம் நடத்துவது ஒரு பக்கம். ராணிமேரி கல்லூரியைத் தலைமைச் செயலகமாக மாற்ற ஜெயலலிதா (அஇஅதிமுக) அரசு முயன்றபோது மாணவிகள் சாலையில் இறங்கிப் போராட் டம் நடத்தியது மறுபக்கம். இப்படி எதுவும் இல்லாமல் அமைதியாக ஒரு பிரச்சனையும் இல்லாமல் பழமை கொஞ்சமும் மாறாமல் 100 ஆண்டுகளுக்கு மேல் செயல்படுகிறது ஒரு காவல் நிலையம். அது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ளது. அந்தக் காவல்நிலையத்தின் வெளிப் பக்கம் உள்ள பெயர்பலகை நவீனமாகத் தோன்றினாலும் உள்கட்டடம் பழைய ஓடுகள் வேயப்பட்டு ஒரு வீட்டின் பொலிவோடு காணப்படுகிறது. 4-2-1907-ல் அடிக்கல் நாட்டப்பட்டதற்கு சான்றுகூறும் கல்வெட்டு இன்னமும் உள்ளது. அதுவும் அந்தக்காலப் எழுத்து வடிவில். அடிக்கல் நாட்டியவர் அப்போது மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஏ.பி.ஏ.கர் (ஹ.ஞ.ஹ.ழுஹசு). அவரது பெயருக்குப் பின்னால் நுளளூச (எஸ்கொயர்)என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு மரியாதைக் குறியீடாக இன்று எழுதப் படும் 'அவர்கள்' என்று பொருள். இப்படிக் கொஞ்சம் மலரும் நினைவுகளைத் தூண்டும் தகவல் உங்கள் ஊரிலும் இருக்கும். அதனை வண்ணக்கதிர் வாசகர்களோடு பகிரலாமே!