tamilnadu

img

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினம்: மக்கள் சந்திப்பு யாத்திரைக்கு வரவேற்பு

அவிநாசி, ஆக்.16- மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, மக்கள் சந்திப்பு யாத்திரைக்கு அவிநாசி யில் வரவேற்பளிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அன்பை வளர்க்கவும், வன்முறையை ஒழிக்க வும்,  ஒற்றுமையை வளர்க்கவும் மற்றும் சுதந்திரப் போராட்டங்களை நினைவு கூறும் வகையிலும் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மக்கள் சந்திப்பு யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை செவ்வாயன்று அவிநாசி புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது. இப்பயண குழுவிற்கு அப்பகுதி யைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர்.