திருவாரூர், பிப்.3- உள்ளாட்சி அமைப்பு களில் பணியாற்றும் குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் ஆலோசனைக் கூட்டம் திரு வாரூரில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் ஏ.பி.தனுஷ்கோடி தலைமை வகித்தார். சங்க மாநிலத் தலைவர் நா.பாலசுப்ரமணி யன், சிஐடியு மாவட்ட செயலா ளர் டி.முருகையன், சங்க மாவட்ட செயலாளர் கே.முனி யாண்டி, மாவட்ட நிர்வாகிகள் டி.கலியமூர்த்தி, ஆறுமுகம், எஸ்.காமராஜ், எஸ்.திருநா வுக்கரசு, ரேவதி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் கொரடாச்சேரி ஒன்றியக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 16-ல் கொரடாச்சேரி யில் தூய்மைப்பணி காவ லர்களின் சிறப்பு பேரவை நடத்துவது, அடையாள அட்டை வழங்க வேண்டும், முழுநேர ஊழியராக்கி ஊதி யத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன