கோவை, பிப். 4- எல்ஐசியின் பங்குகளை தனியா ருக்கு விற்கும் மத்திய அரசின் நடவடிக் கையை கண்டித்து செவ்வாயன்று எல்ஐசி நிறுவன அதிகாரிகள், ஊழி யர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மத்திய நிதி நிலை அறிக்கையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து செவ்வாயன்று நாடு முழு வதும் ஒருமணிநேர வேலைநிறுத்த போராட்டத்திற்கு எல்ஐசி நிறுவ னத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர் சங்க கூட்டமைப்பு அறி வித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, கோவை கோட்ட எல்ஐ சி தலைமை அலுவல கம் முன்பாக ஊழியர்கள் ஒரு மணி நேர வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பட்டன. அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோவை கோட்ட செயலாளர் துளசிதரன் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், எல்ஐசி முதல்நிலை அதிகா ரிகள் சங்கத்தின் நரசிம்மன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் கமலதியாகராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதுகுறித்து தென்னிந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைசெ யலாளர் வி.சுரேஷ் கூறுகையில், மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிக்கிறது. மத்திய அரசு எல்ஐசி பொதுத்துறை நிறுவனத் தின் பங்குகளை பங்கு வர்த்தகத் தில் ஈடுபடுத்துவதற்காக திட்டமிட் டுள்ளது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப் பின் மூலம் எல்ஐசி என்னும் பொதுத் துறை நிறுவனத்தின் பங்குகளை வர்த்தகத்தில் ஈடுபடுத்தி தனியாருக்கு விற்பதாகும். அவ்வாறு பங்குகள் விற் கப்படும் பட்சத்தில் நாளடைவில் அந்த குறிப்பிட்ட சதவிகித பங்குகள் அதி கமாகி எல்ஐசி என்னும் பொதுத்துறை நிறுவனம் தனியார் வசம் ஒப்படைக் கப்படும் சூழ்நிலை உருவாகும். இதனால் எல்ஐசியில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமின்றி இந்தியா வில் உள்ள ஒட்டுமொத்த பொதுமக் களும் பெரும் பாதிப்பை அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மத்திய அரசு இந்த முடிவை கைவிடவில்லை என்றால் அடுத்த கட்டமாக மாபெரும் போராட்டங்களை தொடர்ந்து நடத்து வோம் எனத் தெரிவித்துள்ளார். இதேபோல், கோவை மாவட்ட அனைத்து எல்ஐசி கிளை அலுவல கங்களிலும் வேலை நிறுத்தப் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி
நீலகிரி மாவட்டம், உதகை எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கிளை தலைவர் கோபால் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் தினேஷ், எல்ஐசி முகவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தருமன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உதகை இடைக் கமிட்டி தலைவர் கே.ராஜேந்திரன், உதகை நகராட்சி ஊழியர் சங்கத்தின் தலை வர் எல்.சங்கரலிங்கம், ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள் சங்கத்தின் நந்தகுமார் நன்றி கூறினார். குன்னூர் எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு நந்தகோபால் தலைமை வகித்தார். எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் சௌந்தர்ராஜன், எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் முரளி தரன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கத்தின் கிளை செயலாளர் இளங்கோவன், முகவர் சங்கத்தின் குணசேகரன் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். இதில் ஊழியர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்து பங்கு விற்பனையை கைவிட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி னர். கூடலூரில் உள்ள எல்ஐசி அலுவ லகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கத்தின் கிளை தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் ஜித்தின் கோஷ், வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் தேவராஜ், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் மோக னன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.இதில் எல்ஐசி ஊழியர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், சத்தியமங் கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு எல்ஐசி ஊழியர் சங்கத்தின் கிளை தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் திருத்தணிகாச்சலம் சிறப்புரையாற்றினார். எல்ஐசி பென்ஷனர் சங்கத்தின் கோவை கோட்ட செயலாளர் வாசுதேவன், எல்ஐசி கிளை மேலாளர் தமிழ்ச்செல் வன், வளர்ச்சி அதிகாரி அஸ்கர், முகவர் சங்கங்களின் சார்பில் ராஜா, அருள்மொழி, கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர். ஊழியர் சங்கத்தின் கிளை செயலாளர் குமார் கண்டன உரையாற்றினார். நிறைவாக ஊழி யர் சங்கத்தின் பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார்.