சேலம், ஜூலை 27- ஆவண படுகொலைக்கு எதிராக சிறப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என வலி யுறுத்தி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் தற்போது ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் தருமபுரியில் இளவரசன், மேட்டுப்பாளையத்தில் கனகராஜ், வர்ஷினி ப்ரியா ஆகியோர் ஆணவ படுகொலை செய்யப்பட்டனர். எனவே தமிழக அரசு இனிவரும் காலங்களில் ஆணவ படுகொலை நடக்காத வண்ணம் சிறப்பு சட்டத்தை இயற்றி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் வசந்த் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் நாவரசன், நிர்வாகிகள் காஜா மைதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.