திருப்பூரில் இடதுசாரி கட்சிகள் பிரச்சாரம்
திருப்பூர், அக். 16 – மத்திய பாரதிய ஜனதா அரசு ஏழை, எளிய, சாமானிய மக்களை வதைக்கும் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட்டு, நாடு முழுவதும் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு பொது முதலீட்டை அதிகரித்திட வேண்டும், குறைந்தபட்ச ஊதி யம் ரூ.18 ஆயிரம் உத்தரவாதம் வழங்க வேண்டும் என வலியு றுத்தி திருப்பூரில் செவ்வாயன்று இடதுசாரி கட்சிகள் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசின் கொள் கைகளுக்கு எதிராக நாடு முழு வதும் கண்டன இயக்கம் நடத் துவது என்ற இடதுசாரி கட்சி களின் அறைகூவலுக்கு ஏற்ப திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து பிரச்சார இயக் கம் நடத்தின. திருப்பூர் நகரின் தெற்குப் பகுதியில் வெள்ளியங் காடு, புதூர் பிரிவு தாராபுரம் சாலை, ராக்கியாபாளையம் பிரிவு, சிடிசி கார்னர், கருவம் பாளையம், ஆண்டிபாளையம் பிரிவு ஆகிய இடங்களிலும், வடக்குப் பகுதியில் வலையன் காடு, எஸ்ஏபி, அனுப்பர்பாளை யம், பாண்டியன் நகர், புது பேருந்து நிலையம், வ.உ.சி.நகர் கொடிக் கம்பம் ஆகிய இடங்களிலும் பிரச் சார இயக்கம் நடத்தப்பட்டது. இதில் மத்திய அரசு வேலை யில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண் டும். வேலையில்லா கால நிவா ரணம் வழங்க வேண்டும். வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊதியம் வழங்க வேண்டும். பிஎஸ்என்எல், ரயில்வே, ஏர் இந்தியா மற்றும் ராணுவ தளவாட தயாரிப்பு ஆகிய பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவைக் கைவிட வேண்டும். ஊரக வேலை உறு தித் திட்டத்தில் வேலை நாட் களை 200 நாட்களாக அதிகரிப் பதுடன், நிலுவை சம்பளத்தை உடனடியாக தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டும். விவ சாயிகள் நெருக்கடியில் இருந்து மீள ஒரு முறை கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். முதியோர், வித வைகள் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயி ரமாக வழங்க வேண்டும். ரிசர்வ் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.1.76 லட்சம் கோடி நிதியை சாலை, நீர்நிலைகள் மேம்பாடு, சுகாதாரம் உள்ளிட்ட பொது முதலீட்டுக்கு செலவிட வேண் டும். அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கி, மக்களி டம் வாங்கும் சக்தியை அதி கரிக்க வேண்டும் என பிரச்சார இயக்கத்தில் வலியுறுத்தப்பட் டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், கட்சி ஊழியர்கள் திரளாக பங் கேற்றனர்.