சேலம், பிப்.15- சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டியில் சனியன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக் கட்டு போட்டிக்கு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் தீபா காணிகர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையேற்று கொடி யசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக் கட்டு விழாவில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக மருத்துவ துறையினர் உடற் கூறு தகுதியை ஆய்வு செய்தும், கால் நடை பராமரிப்புத் துறையினர் காளை களின் கொம்புகள் கூராக இல்லாததும் மற்றும் உடற்கூறு பரிசோதனைகளும் செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழை மத்திய பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டபின் போட்டியில் பற்கேற்க அனுமதிக்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இப் போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். மாடு பிடி வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப் பட்டு ஒவ்வொரு பிரிவினரும் தனித் தனியாக இப்போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, ஜல்லிக் கட்டு உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வாசிக்க மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இவ்விழாவில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர்மு.துரை, கால் நடை பராமரிப்புத்துறைமண்டல இணை இயக்குநர் மரு.புருஷோத்தமன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கே.கனகராஜ், ஆத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் எம்.ராஜூ, கெங்கவல்லி வருவாய் வட்டாட் சியர் சு.சிவக்கொளுந்து, சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மெடிக்கல் ராஜா (எ) அ.ராஜசேகரன், தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் க.சுந்தர மூர்த்தி, தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு ஒருங்கி ணைப்பு குழுத் தலைவர் சுரேஷ், ஜல்லிக் கட்டு கண்காணிப்புக் குழுவினர் மற்றும் வரு வாய்த் துறை, கால்நடைபராமரிப்புத் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகா தாரத் துறை, வளர்ச்சித் துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமா னோர் கலந்துகொண்டனர்.