- விசைத்தறித் தொழிலாளர்கள் வேதனை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுமார் 50 நாட்களை கடந்துள்ள இந்த ஊரடங்கால் அவிநாசி பகுதியில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட விசைத்தறி தொழில்கள் இயங்க முடியாமல் நிறுத்தி வைக்கப் பட்டது. இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளு டன் தொழில் நிறுவனங்கள் இயங் கலாம் என அரசு சில தளர்வு களை அறிவித்தது. இருப்பினும் ஒரு சில இடங்களில் விசைத்தறி தொழில் கள் பகல் நேரம் மட்டும் பெயரள விற்கே செயல்படும் நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து ஆட்டையம்பாளை யம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் கருப்புசாமி என்பவர் கூறுகையில், மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் இருந்து பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு நூல்கள் மில் களுக்கு அனுப்பப்படும். தற்போது அப்பகுதியிலிருந்து பஞ்சுகள் வரு வதில்லை. இதனால் நூல் உற்பத்தி இன்றி மில்கள் நிறுத்தம் செய்யப் பட்டுள்ளது. ஒரு சில பகுதியில் இருப்பு வைத்திருந்த நூல்களை வைத்து பகல் நேரம் மட்டுமே விசைத் தறி செயல்படுகிறது. 60 நாட்கள் கடந்து விட்ட நிலையில் தொழில் செய்வதற்கு இருப்பு வைத்திருந்த பணமும் கரைந்துவிட்டது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் பெரும் பகுதி விசைத்தறிகள் இயங்க ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அனந்தகிரி பகுதியைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் சுப்பிர மணி என்பவர் கூறுகையில், கொரோனா கால பாதிப்பு காரண மாக சரிவர விசைத்தறியை இயக்க முடியவில்லை. குடோனுக்கு வாட கை கொடுக்க முடியவில்லை, தொழி லாளர்களுக்கு கூலி கொடுத்து உதவி செய்ய முடியவில்லை, இருக்கின்ற நூலை வைத்து இரண்டு வாரங் களுக்கு மட்டுமே தொழிலாளிக்கு வேலை கொடுக்க முடியும். நூல் உற்பத்தி நடந்தால் மட்டுமே விசைத் தறி இயங்க முடியும். அரசாங்கம் எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித் தார்.
விசைத்தறி பெண் தொழிலாளி அமலா என்பவர் கூறுகையில், நாட்கள் மட்டுமே வேகமாக கடந்து விட்டது. எனக்குத் தெரிந்த வேலை விசைத்தறி தொழில் மட்டுமே. இதனை நம்பியே என் வாழ்க்கையை நடத்தி வந்தேன். கொரோனா நிவா ரண நிதியாக அரசாங்கம் கொடுத்த பணம் எங்கள் அன்றாட தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாது. உடனடி யாக அரசாங்கம் எங்கள் வாழ்வா தாரத்தை கருத்தில் கொண்டு தொழிற் சங்கம் அறிவித்த ரூ.7500 நிவாரணத் தொகையாவது எங்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
கருவலூர் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி கருப்புசாமி என்பவர் கூறுகையில், நூல் மில் இயங்காததால், விசைத்தறி இயங்க முடியவில்லை. இதனால் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. தினசரி மாற்று வேலையைத் தேடி செல்லும் அவலத்திற்கு சென்றுள்ளோம். தமிழக அரசு கொடுக்கின்ற நிவா ரண உதவிகள் பாதி பசியை கூட போக்கவில்லை. உடனடியாக மாநில அரசாங்கம் நூல் மில் இயக்கிட உதவிடும் வகையில் லாரி போக்கு வரத்து சேவைக்கு அனுமதித்திட வேண்டும் என தெரிவித்தார். இதேபோல் விசைத்தறி தொழி லாளிகள் கூறுகையில், பெரும் பாலும் தினசரி கூலிக்கு தான் சென்று வருகிறோம். தற்போது அரசாங்கம் எவ்வித முன்னறிவிப்பு மின்றி திடீரென 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டதால் எங்கள் வாழ்வா தாரம் கேள்விக்குறி ஆக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசாங்கம் தருகின்ற நிவாரணத் தொகையை வைத்து அத்தியாவசியத் தேவை களைக் கூட பூர்த்தி செய்ய முடியாது. தினசரி வெவ்வேறு வேலைகள், பந்தல் போடுவது, கட்டட வேலை செய்வது, விவசாய வேலைக்கு செல் வது என நாட்கள் இப்படியே நகர்ந்து வருகிறது, எதிர்காலத்தை நினைத் துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்த னர்.
இதுகுறித்து, சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முத்துசாமியிடம் கேட்ட போது, கொரோனா வைரஸ் காரண மாக தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல குடும்பங்கள் பட்டினி கொடுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, இத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் நிவாரணத் தொகையாக ரூ. 7500 வழங்க வேண்டும். நலவாரியத் தில் பதிவு செய்யாத தொழிலாளர் களுக்கும் இந்த நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறோம். இருப்பினும், உரிய நட வடிக்கை இல்லாததால் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து போராடி வருகிறோம், ஆகவே, மத்திய, மாநில அரசுகள் நாங்கள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித் தார்.
-அருண் அவிநாசி.