tamilnadu

img

முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

நாமக்கல், செப்.29- பள்ளிபாளையம் அருகே முதுமக்கள் தாழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகரில்  வெள்ளியன்று மின் கம்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக அப்பகுதியில் தொழி லாளர்கள் குழி தோண்டினர். சுமார் மூன்றடி ஆழம் தோண்டியதும் ஏதோ பானை போன்ற பொருள் தட்டுப் பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் கவனமாக தோண்டினர். புதையுண்டிருந்த பானைக்குள் முழுவது மாக மண் நிரம்பியிருந்ததால், அதனையும் தொழி லாளர்கள் மெல்ல அகற்றினர். அதில் சில எலும்புகள் காணப்பட்டது.  இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி நல்ல சாமிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அதிகாரி, அந்த பானையானது முந்தைய காலங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முதுமக்கள் பயன்படுத்திய தாழி என்பதை கண்டறியப்பட்டது. இதையடுத்து குமாரபாளையம் வட்டாட்சியர் தங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதுமக்கள் தாழியை பார்வையிட்டார். 200 ஆண்டுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இந்த முது மக்கள் தாழியை சேதப்படுத்தாமல் தோண்டி எடுத்து  சுத்தப்படுத்தி, சேலம் அருங்காட்சியகத்தில் ஒப்ப டைக்க அவர் உத்தரவிட்டார்.