கோவை, நவ. 23- கோவையில் அரசு வேலைவாய்ப்புத்துறை மற்றும் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி கருத்தரங்கம் சனியன்று நடைபெற்றது. கோவையை அடுத்த வடகோவை காமராஜபுரம் சமூதாய கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப் பாளர்கள் டி.இளையராஜ், ஆர்.பாலமுரளி, சி.எம்.பிரபா கரன், சி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.பழனிசாமி வரவேற்றார். இம்முகாமில் வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குநர் ஆ.லதா பங்கேற்று சிறப்புரையாற்றினார். வேலைவாய்ப்பு செயல் பாடுகள் குறித்து துணை இயக்குநர் ஆ.ஜோதிமணி உரை யாற்றினார். அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி முகாமின் ஆசிரியர் முத்துராமலிங்கம், அரசு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டினார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்.முருகேசன் வாழ்த்தி உரையாற்றினார். இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் பங் கேற்றனர். முடிவில் எல்ஐடிசி ஆர்.முரளிதரன் நன்றி கூறி னார்.