கோவை, ஆக. 5 - கோவையில் தொடர் மழையின் காரணமாக தொண்டாமுத்தூர் பகுதி யில் ஆயிரம் ஹெக்டர் பரப் பளவில் அறுவடைக்கு தயா ராக இருந்த வெங்காயம் தண் ணீரில் மூழ்கி நாசமாகி உள்ளது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை யில் அதிக அளவு மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்து அதிக ரித்து நொய்யல் ஆற்று படுக்கைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலை யில் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு ரக பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் செவ் வாயன்று பெய்த கன மழை காரணமாக அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வெங்காயம் தண்ணீரில் மூழ்கி நாசம் அடைந்தது. இதேபோல் தொண்டாமுத்தூர், முண்டந்துறை, நல்லூர் வயல், மரக்காடு பகுதிகளில் பயிரிடப்பட்ட 10 ஆயிரத்துகும் மேற்பட்ட வாழைகளும் பலத்த காற்றில் குழை தள்ளபட்ட நிலையில் வேரோடு சாய்ந்து உள்ளது.
மேலும் பாக்கு மரங்கள், மக்காசோளம் உள்ளிட்ட ஏராளமான பயிர்களும் சேதமடைந்துள்ளன. இதனால் பல்வேறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், மழையின் காரணமாக சேதம் அடைந்த விவசாய பயிர்கள் குறித்து வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சேத மதிப்பு குறித்து ஆய்வ றிக்கைக்கு பின்பு உரிய நிவாரண தொகை வழங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சி யர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதேபோல், கல்கொத்தி மலை பகுதி யில் உள்ள பழங்குடியின மக்கள் வசித்து வந்த தற்காலிக வீட்டின் மேற்கூரைகள் பலத்த காற்றின் காரணமாக தூக்கி வீசப்பட்டது. இதையடுத்து, தற்போது கட்டப்பட்டு வரும் முடிவடையாத வீடு களில் தஞ்சம் புகுந்தனர்.
மேலும், சிறுவாணி சாலையில் இருட்டு பள்ளம், சாடிவயல் பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததின் காரணமாக ஏழு மழை கிராமங்களில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது.