tamilnadu

img

கோவையில் அதிகரித்த குழந்தை திருமணம் யுனிசெப் கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்

கோவை, டிச. 5 –   2015 - 16 ஆம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட தேசிய அளவி லான குடும்பநல ஆய்வில், கோவை மாவட்டத்தில் குழந்தைப் பருவங்களிலே 20 சதவீ தம் பேருக்கு திருமணம் நடைபெ றுவதாக யுனிசெஃப் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. யுனிசெப் அமைப்பு மற்றும் தமிழ்நாடு தோழமை அறக்கட் டளை, கோயமுத்தூர் பத்திரி கையாளர் மன்றம் இனைந்து குழந்தை திருமணம், குழந்தைகள் மீதான வன்கொடுமை குறித்து ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கம் கோவை பத்திரிகை யாளர் மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராள மான ஊடகவியலாளர்கள் பங் கேற்றனர். முன்னதாக பத்திரி கையாளர் மன்ற செயலா ளர் க.தங்கராசு வரவேற்புரையாற் றினார்.  இதனைத்தொடர்ந்து யுனி செப் அமைப்பின் தமிழ்நாடு திட்ட மேலாளர் ஏ.அறிவழகன் ராயன் பேசுகையில், உலகில் நடை பெறும் குழந்தை திருமணங்களில் 3 இல் 1 பங்கு இந்தியாவில் நடைபெறுகிறது. மத்திய அரசு கடந்த 2005-06 ஆம் ஆண்டுகளில் 20 முதல் 24 வயதில் உள்ள திருமணமான பெண்களிடம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான கணக்கெடுப்பில் நாட்டில் 47.7 சதவிகிதம் பேருக்கு குழந்தைப் பரு வத்தில் திருமணம் நடைபெறுவது தெரியவந்தது. தமிழகத்தில் 22.8 சதவீதம் ஆகும். இந்நிலையில் 10 ஆண்டு களுக்கப் பிறகு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில்  2015-16   ஆம் ஆண்டில் தேசிய அளவில் 20 சத விகிதம் குறைந்து தற்போது 27.7 சதவிகிதமாக உள்ளது.  ஆனால் தமிழகத்தில் 6 சதவிகி தம் மட்டுமே குறைந்து 16.4 சதவி கிதமாக உள்ளது. இதில் வளர்ந்த மாவட்டமாக கருதப்படும் கோவையில் குழந்தைப் பருவத் தில் 20 சதவிகிதம் பேருக்கு  திருமணம் நடைபெறுவது தெரி யவந்துள்ளது. குழந்தைகள் திரு மணம், குழந்தைகள் மீதான வன் கொடுமைகள் அதிக அளவில் நடைபெறும் முக்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. இதனைக் கட் டுப்படுத்துவதற்காக யுனிசெஃப் அமைப்பு சார்பில் தமிழகத்தில் ஆய்வப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவாதாக கூறினார். மேலும், குழந்தைகள் வன்கொ டுமை குறித்த செய்திகளை அவர்களின் மாண்புகளை பாதிக் காத வகையில் ஊடகவியலா ளர்கள் செயல்பட வேண்டும் என தமிழ்நாடு தோழமை அறக்கட் டளை அ.தேவநேயன் தெரி வித்தார். இந்நிகழ்வில் சென்னை பத்திரிகையாளர் மன்ற துணை தலைவர் பாரதிதமிழன் மற்றும் யுனிசெப் நிர்வாகிகள் பங்கேற் றனர். முடிவில் கோவை பத்தி ரிகையாளர் மன்ற தலைவர் அ.ர. பாபு நன்றி கூறினார்.