tamilnadu

குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு 

 பொள்ளாச்சி, ஜூலை 20 - கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆழியாரை அடுத்த குரங்கு அருவியில் நீர் வரத்து இல்லாததால் வறண்டு காணப்பட்டது. இதனால் 3 மாதங்களாக சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து மழைப்பொழிவு காணப்படுவதால் குரங்கு அருவிக்கு நீர்வரத்து அதிக ரித்துள்ளது. இதனால் வெள்ளிக் கிழமை முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி  அளித்தனர். இது சுற்றுலாப் பயணிகளிடையே வர வேற்பை ஏற்படுத்தியுள் ளது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக ரித்து காணப்பட்டனர்.

;