tamilnadu

img

கணவனை இழந்த பெண்ணிற்கு உதவி

சேலம், ஜன. 10- கணவனை இழந்து வாழும் பெண் ணிற்கு மாதம் ரூ.1000  விதவை உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணை யினை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வியாழனன்று வழங்கினார். சேலம் மாவட்டம், அம்மாபேட்டை கிராமம், புத்துமாரியம்மன் கோவில் பகுதி யில் பிரேமா(33) வசித்து வருகிறார். இவ ரது கணவர் செல்வம் (37) கடந்த 7 மாதங்க ளுக்கு முன்பு மரணமடைந்தார். இவர் களுக்கு காளியப்பன் (7), தர்மலிங்கம் (4), குணசேகரன் (2) ஆகிய மூன்று ஆண் குழந் தைகள் உள்ளனர். இவர், கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார். சில நாட்களாக உடல் நல குறைபாடு காரணமாக வேலைக்கு செல்லாத இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவர் வறுமையில் இருப் பதை அறிந்து மாவட்ட நிர்வாகத்தின் சார் பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விதவை உதவித்தொகையாக மாதம் ரூ.1000 பெறுவ தற்கான உத்தரவு ஆணையினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட் சியர் சி.அ.ராமன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.திவாகர் உள்ளிட்டோர் உடனிருந்தார்.

;