பி.ஆர்.நடராஜன் எம்.பி. தொடக்கி வைத்தார்
திருப்பூர், பிப். 28 – தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் தடுப்பு மருந்து துறை சார்பில் பல்லடம் அறிவொளி நகரில் சுகாதாரத் திருவிழா நடத்தப்பட்டது. கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்ற இம்முகாமை பி.ஆர்.நடராஜன் எம்.பி. திறந்து வைத்தார். பல்லடம் சட்டமன்றத் தொகுதி அறிவொளி நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வெள்ளி யன்று நடைபெற்ற இம்முகாமில் ஆண், பெண் மற்றும் குழந்தைகளுக்கு பொது நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. அத்துடன் தேவைப்படு வோருக்கு இரத்தம், சிறுநீர், ரத்தஅழுத்தம், ஸ்கேன், இசிஜி, கண் மற்றும் எச்ஐவி பரிசோதனையும் செய் யப்பட்டன. இதில் பொது சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் பொது மக்க ளுக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தி, பாரதி சின்னசாமி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.