tamilnadu

img

அரசு பணியாளர்கள் வந்து செல்ல கோவையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோவை, மே 18- கோவையில் அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்கு வந்து செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படவுள்ளது.  கோவை மாவட்டத்தில் பணிபுரியும் அரசு பணியாளர் கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பணிக்கு வந்து  செல்லும் வகையில் 22 சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகிறது. இப்பேருந்துகள் சூலூர், கருமத்தம்பட்டி, பொள் ளாச்சி, குனியமுத்தூர், துடியலூர் பகுதிகள் உள்ளிட்ட  மாவட்டத்தின் பலவேறு பகுதியிலிருந்து இயக்கப் படுகிறது. பணியாளர்களை அழைத்து வரும் பேருந்து கள் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடை கிறது. இதன் பின்னர் அனைவரும் முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியுடன் பணியில் ஈடுபட செல்கின்றனர்.