கோவை, அக். 12 – கோவை நகைப்பட்டறை தொழிலாளி பெங்களூரு கொண்டு சென்ற 159 சவரன் நகையை கொள்ளையடித்த நபர்கள் இருவர் உத்தரபிரதேச மாநிலத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். கோவை செட்டிவீதி ஐயப்பா நகர் பகுதியில் நகை பட்டறை நடத்தி வருபவர் முரளி நரசிம்மன். இவரிடம் பணியாற்றும் நகைபட்டறை தொழிலாளி முரளி என்பவர் கடந்த செப். மாதம் 25 ஆம் தேதியன்று ரூ.44 லட்சம் மதிப்புள்ள 159 சவரன் நகைகளை கர்நாடக மாநிலம் பெங்களூரில் விற்பனை செய்வதற்காக பேருந்தில் கொண்டு சென்றனர். தனியார் பேருந்து மூலம் சென்ற இவரிடம் இருந்த நகை பையை மர்மநபர்கள் கொள்ளை யடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து உபி மாநிலம் மொராதாபாத் பகுதியில் காவலர்கள் வாகன சோதனை மேற் கொண்டபோது நகைகள் கொள்ளையடித்த இருவர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து அனைத்து நகைக ளையும் பறிமுதல் செய்த உ.பி காவல்துறையினர் பிடி பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் மேற் குறிப்பிட்ட இருவரும் உ.பி. மாநிலம் பிஜ்னூர் பகுதியை சேர்ந்த தேவேந்தர் (25), இசான் (47) என்பது தெரியவந்துள்ளது. நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட தையும், இருவர் பிடிபட்டதையும் உறுதி செய்த கோவை காவல்துறையினர் இருவரையும் கைது செய்து அழைத்து வருவதற்காக உத்திரபிரதேசம் சென்றுள்ளனர்.