tamilnadu

img

சிஐடியு சார்பில் மின்வாரிய கேங்மேன் பணிக்கு இலவச பயிற்சி

பெரம்பலூர், நவ.17- தமிழ்நாடு மின் வாரியத்தில் 5 ஆயி ரம் கேங்மேன் பணி நியமனத்திற்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. எனவே பெரம்பலூர்- அரியலூர் மாவட் டங்களை சேர்ந்த ஆன்லைனில் விண்ணப்பித்த நபர்கள் சிஐடியு, மின் ஊழியர் மத்திய அமைப்பு, ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து மின்வாரிய சங்கத்தால் நடத்தும் இலவச பயிற்சி மையத்தினை துவங்கியுள்ளது.  ஞாயிறன்று பெரம்பலூர் துறை மங்கலத்திலுள்ள சிபிஎம் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்ட தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் எஸ்.ரெங்கராஜன் பயிற்சி மையத்தினை துவக்கி வைத் தார். வாலிபர் சங்க மாவட்ட பொருளா ளர் எஸ்.கே.சரவணன், வட்ட துணைத் தலைவர்கள் வி.தமிழ்செல்வன், எஸ். காசிநாதன், பி.பாலகிருஷ்ணன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். வட்ட பொருளாளர் கே.கண்ணன் நன்றி கூறி னார். நவ.17 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை அனைத்து விடுமுறை நாட்களி லும் நடைபெறும் இந்த பயிற்சி மையத்தில் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டத்தை சார்ந்த ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.